
எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுஅதே சமயம் பள்ளிகளை மீண்டும் திறக்கும் போது இவ்விரு தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மட்டுமே முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு பணிக்குழுவின் இயக்குநர் முகமது ஃபர்ஹான் கேட்டுக் கொண்டார். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து நிலையிலான மாணவர்களும் வகுப்புகளில் சேர்வதை நான் ஆதரிக்கவில்லை. மாறாக, பள்ளிகளைக் திறக்கும் நடவடிக்கை எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
