
கிராப் வாடகைக் கார் சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவை வழங்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டத்திற்கு இதுவரை 13, 795 விண்ணப்பங்களை மாநில அரசு பெற்றது. இம்மாதம் 3 ஆம் தேதி வரை 13,795 பேரிடமிருந்து தாங்கள் விண்ணப்பங்களைப் பெற்றதாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி நோர் கூறினார். அவற்றில் 10,204 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதுவரை 8,391 பேர் 80 ஆயிரத்து 714 வெள்ளி தொகையை கிராப் சேவைக்காக பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
