
தமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர் மீது மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் வழக்கு தொடுக்கவுள்ளார். தமது பெயரோடு, புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டுள்ளதால் அவர் இந்த வழக்கைத் தொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக பொய்யானச் செய்தி வெளியிடப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக தாம் இந்த அவதூறு வழக்குத் தொடுக்க இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும் சொன்னார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
