
மலேசியா தற்போது கோவிட் பெருந்தொற்றை தடுக்க போராடி கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் அகமாட் மதங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதை விடுத்து மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முற்பட வேண்டும் என செபூத்தே நாடாளூமன்ற உறுப்பினர் திரேசா கோக் பதிலடி கொடுத்தார். இஸ்லாம் அல்லாத சமயங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை அரசாங்கம் இயற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், திரேசா கோக் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக உள்ளது. அது அனைவருக்கும் பொதுவான நிலையில் இருக்கின்ற போது இவ்வாறான சட்டத்தை இயற்றவேண்டிய அவசியம் இல்லை என திரேசா கோக் கேள்வி எழுப்பினார்.



