28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ! பிரதமர் மோடி அறிவிப்பு

மகாகவி பாரதியாரின் 100ஆவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் 100ஆவது நினைவு தினத்தில் அவரது பெரும்புலமை, நாட்டுக்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பை நினைவில் கொள்வோம் என்றார். உலகின் மிகப்பெரிய மூத்த மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சுப்பிரமணிய பாரதியின் 100 ஆவது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு நிறுவப்படும்’ என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles