
பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சிக்கு வருவதை தடுக்க டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக வருவதற்கு ஆதரவளித்தாக டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் கூற்று வேடிக்கையாக உள்ளது என்று அம்னோ உதவித் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார். மொகிதீன் இவ்வாறு செய்வதற்கு காரணம் தமது கட்சி மற்றும் பெரிக்காத்தான் அரசும் அதிகாரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே ஆகும். இதில் வேடிக்கையாகக் கருதப்படுவது தம் கீழுள்ள பெரிக்காத்தான் அரசின் தோல்வியை ஏற்றுக் கொள்ள அவர் மறுக்கிறார். டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். இதனால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்து விட்டதாக அவர் சொன்னார்.
