
சித்தரவதை மற்றும் கொலை செய்வதற்காக 200 பெண் நீதிபதிகளை தலிபான்கள் தேடி வருவதாக, பிரிட்டன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்களை கொன்றும், சித்தரவதை செய்தும் வருகின்றனர். அதேநேரம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்கிய 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் உயிர் பயத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பிரிட்டனின் ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தி நிறுவனம், தனது செய்தியில் தெரிவித்துள்ளது.



