
அண்மையக் காலமாக தமது கட்டுரைகள் தினசரித் தமிழ் நாளிதழ்கள் மற்றும் ப்ரீ மலேசியா டுடே இணையத் தளத்தில் வெளியானதிலிருந்து இந்திய சமூகத்திலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்குத் (இ.பி.யூ.) தங்களின் கருத்துகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று டெனிசன் ஜெயசூரியா தெரிவித்தார். இது உண்மையில் நம் சமூகத்திற்காக குழு முறையில் கலந்துரையாடலை நடத்தி அதிலுள்ள கருத்துகளை இ.பி.யூ.வுக்கு அனுப்பி வைக்க ஊக்குவிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்த போதிலும் என் கண்ணோட்டத்தில் நான் தொடர்ந்து உறுதியாகத்தான் இருக்கிறேன். இதில் பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டிச் சமர்ப்பிக்க எந்த முதன்மை அரசியல் கட்சியோ அல்லது சமூகமோ முன்வரவில்லை என்றார்.
