
உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தடுப்பூசி மையத்திற்கு நேரில் செல்வதில் சிரமத்தை எதிர் நோக்குவோர் தங்கள் வட்டார தலைவர்களை அணுகும்படி சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா கேட்டுக் கொண்டுள்ளார். இவர்கள் பெயர்கள் மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றார். இதனிடையே நேரடி நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவை இல்லை என்று அவர் தெரிவித்தார்.
