
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7ஆம்தேதி 50 கோடி என்ற நிலையை எட்டியது. ஆகஸ்ட் 25இம் தேதி 60 கோடியை கடந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை நேற்று 75 கோடி என்ற மைல் கல்லை கடந்துள்ளது.
