
சரவா மாநிலத்தில் வீரியம் அதிகமுள்ள டெல்தா கோவிட் -19 வைரஸ் அதிக அளவில் பரவியிருப்பதாக அம்மாநில சுகாதார- சமூக மருத்துவ மையத்தின் பேராசியர் Dr. David Perera எச்சரித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் , ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 307 நோய்த்தொற்று சம்பவங்களில், 303 சம்பவங்கள், டெல்தா வைரசுடன் தொடர்புடையது என்று உறுதிப்பட்டதாக அவர் எச்சரித்தார்.
