
தங்கள் தொழிலாளர் தடுப்பூசியைப் முழுமையாகப் பெற்றிருப்பதை முதலாளிகள் உறுதி செய்யவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வர்த்தக நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்னர் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முதலாளிகள் காட்டும் அலட்சியப் போக்கு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட சமூகத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் எச்சரித்தார். இரண்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களை சில வணிக மையங்களில் அனுமதிப்பதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
