
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்த வளாகத்தை அமெரிக்கா சேதப்படுத்தி விட்டதாக தாலிபன் குற்றம்சாட்டியுள்ளது. 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா ஆகஸ்ட் 31 ஆம் தேதி முற்றாக வெளியேறியது. இப்போது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே ஆப்கானிஸ்தான் தற்போது மனிதாபிமான நெருக்கடியில் இருப்பதால் அதற்கு உதவிடுமாறும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
