
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதை ஆதரிப்போம் என்று நாங்கள் எந்த இடத்திலும் கூறவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நாட்டில் கோவிட் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவு தரும் வகையில் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். பிரதமருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
