
கோவிட் தடுப்பூசிச் சான்றிதழைப் போலியாக்கியதற்காக 10 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர் என்று உள்துறைத் துணை அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர், இஸ்மாயில் முகமட் சையிட் தெரிவித்தார்.
இவர்களில் ஒருவருக்குக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 10 பேர். எனினும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர் ஒருவர் மட்டுமே என்று அவர் சொன்னார்.
இதை மாநில அளவில் எடுத்துக் கொண்டால் கிளாந்தான் (1), மலாக்கா (2), சரவா (4), பேரா (1), சபா (2) என மொத்தம் 10 பேர் இருக்கின்றனர்.
இதில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் சபா மாநிலத்த்தைச் சேர்ந்தவர் என்று மக்களவையில் அவர் குறிப்பிட்டார்.
