
கோவிட் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதரத்தை மீட்சிப் பாதைக்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா வரவேற்றுள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி நாட்டில் அரசியல் நெருக்கடி விரைவில் தீர்வு காணப்படும் என்று மாமன்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
