
பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சியில் மலாக்கா மாநிலத்தில் இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. 61 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த நிலத்திற்கு ஆட்சிக்குழு அங்கீகாரம் பெறப்பட்டு கடிதமும் கிடைத்தது. ஆனால் இப்போது புதிய ஆட்சியில் அந்த நிலத்தை வழங்கமுடியாது என்று மலாக்கா மாநில அரசாங்கம் அறிவித்திருப்பது பெரும் ஏமாற்றம் அடைவதாக காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்தார்.
