
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் பயன்படுத்தும் சின்னம் குறித்து சுமுகமான முறையில் பேசி தீர்வு காணப்படும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பக்கத்ததான் ஹரப்பானில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன. சில கட்சிகள் பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காணப்படும் என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் தெரிவித்தார்.
