
கொரோனோ கொடிய நோய் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது. சீனாவில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்று தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறார்கள். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 140 கோடி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில் நேற்று வரை 216 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 100 கோடி பேருக்கு முழுமையாக இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.