
பாரோய் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் எப்சி 4 – 2 எனும் கோல் கணக்கில் அரச மலேசிய போலீஸ் படை எப்சியை வீழ்த்தி பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்தாண்டு நெகிரி செம்பிலான் எப்சி மலேசிய சூப்பர் லீக் போட்டிக்கு தகுதி பெற்றது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் நெகிரி செம்பிலான் குழு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. சிறந்த பயிற்றுனர் கே.தேவன் தலைமையில் இந்த வெற்றியை நெகிரி செம்பிலான் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நெகிரி செம்பிலான் அணியின் இந்த வரலாற்று மிக்க ஆட்டத்தைக் காண முக்கியப் பிரமுகர்கள உட்பட 300 கால்பந்து ரசிகர்கள் பாரோய் துங்கு அப்துல் ரஹ்மான் அரங்கில் திரண்டனர்.
