
மக்காவ் எனப்படும் இணையம் வழி மோசடியில் 12 லட்சம் வெள்ளியை மலேசிய மாது ஒருவர் இழந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 61 வயது மதிக்கத்தக்கப் மாது தாம் ஏமாற்றப்பட்டது தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ளார் என்று கோலாலம்பூர் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் துணைத் தலைவர் Tan poh Cheok தெரிவித்தார். வருமான வரியை செலுத்தவில்லை என்றும், கள்ளப் பண மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி, உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அதிகாரியாக நடித்து ஏமாற்றிய நபரிடம் , பாதிக்கப்பட்ட அப்பெண் தனது சேமிப்பிலிருந்து அந்த மிகப் பெரிய தொகையைப் பறிகொடுத்து ஏமாந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வருகிறது
