28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

திருப்பதியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளிமாநில பக்தர்களும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறையை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது கொரோனா தடுப்பூசி 2 செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். இல்லையேல் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles