
தேசிய மீட்சி திட்டத்தில் ( கட்டங்கட்டமாகப் பள்ளிகள் திறக்க தயாராவதற்கு முன்பு கல்வி அமைச்சசு கோவிட் -19 சுய-சோதனை கருவிகளை பள்ளிகளுக்கு வழங்கும். சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் உமிழ்நீர் கண்டறியும் சோதனை கருவி வழங்கப்படும் என்றும் மாணவர்கள் பள்ளி அமர்வைத் தொடங்குவதற்கு முன்பு சோதனை நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார். தங்கும் விடுதி பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவர்களுக்கு சுய-சோதனை கருவியைப் பயன்படுத்தி சோதனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்
