
தற்காலிக வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கான விண்ணப்ப முறையை எளிதாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து அங்கீகரிப்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு உதவுவதற்கு மாநில அரசும் ஊராட்சி மன்றங்களும் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைவதாக அவர் சொன்னார். வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இது புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்
