
Working for workers செயலி வாயிலாக முதலாளிகளுக்கு எதிராக 8,599 புகார்களை பெற்றிருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இன்று தெரிவித்தார். தாமதமாக சம்பளம் வழங்குவது, சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வது உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் அமைச்சு இந்த புகார்களை பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் நோய்தொற்று காலகட்டத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்
