
செலாயாங் மற்றும் செர்டாங் மருத்துவமனைகளில் தற்போது நோய்த்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவ்விரு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று காரணமாக எவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார். ஆகஸ்டு மாதம் முதல் இவ்விரு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது என்றார் அவர். இவரு மருத்துவமனைகளும் நோய்த்தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனைகளாக கருதப்படாது என்று அவர் தெரிவித்தார்.
