
கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை தயார்படுத்தும்படி சட்டத்துறை தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாடி தெரிவித்தார். கட்சி தாவல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக இந்த சட்டம் உருவாக்கப் பட வேண்டும். இதற்கு ஆழமான ஆய்வு நடவடிக்கைத் தேவைப்படுகிறது. அரசும் இப்போதுதான் செயல்படத் தொடங்கியதால் சட்ட அமலாக்கத்திற்கு சற்று காலம் பிடிக்கும் என்று மக்களவையில் டத்தோஸ்ரீ வான் ஜுனாடி குறிப்பிட்டார்.
