
பேராக் ஊத்தான் மெலிந்தாங்சை சேர்ந்த ராமசாமி முத்தாலு வயது 68 உயிருடன் இருக்கும் வேளையில் அவர் இறந்துவிட்டதாக தேசிய பதிவு இலாகா மரண சான்றிதழ் அறிக்கையை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார் . மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் சகோதரர் மணியம் காலமானார். ஆனால் இறந்து போனது ராமசாமி என்று மரண சான்றிதழ் சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் அவர் அனைத்து சலுகைகளையும் பறி கொடுத்திருக்கிறார் என்று டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.
