
மாணவர்கள் அடுத்த மாதத் தொடக்கத்தில் பள்ளி செல்ல இருக்கும் நிலையில் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஒருங்கிணைப்பில் தொகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துப்பட்டது. இதனால் பத்து உஞ்சோர் தேசிய இடைநிலைப் பள்ளி தடுப்பூசி மையமாக மாறியது. கிள்ளான் வட்டாரத்தில் உள்ள நான்கு பள்ளிகளைச் சேர்ந்த 4 மற்றும் 5-ஆம் படிவ மாணவர்கள் 600 பேர் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் ஆகியோருடன் டாக்டர் குணராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடை பெற உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
