
தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கோவிட் -19 தடுப்பூசிகளும் தொற்றுநோயால் ஏற்படும் இறப்பு மற்றும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உறுதியளித்தார். எனினும், சுகாதார அமைச்சு சினோவாக் தடுப்பூசி பற்றிய மேலதிக ஆய்வுகளை நடத்துகிறது, இதில் பெறுநர்களுக்குப் பூஸ்டர் ஊசி போடும் சாத்தியமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
