
நாட்டில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வாங்க கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பாளருடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தற்போது, மலேசியாவில் 80 விழுக்காடு அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 12 முதல் 17 வயது வரையிலான இளையோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
