
மலேசியா தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டை அரசாங்கம் தொடரும் என்று உள்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார் இம்முடிவு எடுக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு மற்றும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவதற்கும் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
