
சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு இருப்பதால் தற்போது மலேசியர்கள் சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் எழில் கொஞ்சும் லங்காவி தீவுக்கு கடந்த ஒரே வாரத்தில் 12 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 11,853 பேர் மலேசியர்கள். 745 பேர் வெளிநாட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்காவி நோக்கி சுற்றுப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.


