
வரும் நவம்பர் மாதத்தில் நாடு தழுவிய அளவில் நீர் விளையாட்டு பூங்கா திறக்கப்படலாம் என்று கலை பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தரா தெரிவித்தார். நாட்டில் 90 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசியை போட்டுகொண்டிருப்பார்கள் என்பதால் அப்போது நீர் விளையாட்டு பூங்கா திறக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
