27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கைவிடப்பட்ட இந்திய மாதுவுக்கு மாண்புமிகு கருப்பையா உதவி

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட இந்திய மாது ஒருவருக்கு பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா உதவிகரம் நீட்டியுள்ளார். மூன்று பிள்ளைகளுக்கு தாயான இந்த மாது குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.. இதனால் இவர் தனித்து விடப்பட்டார். இதற்கு முன்னர் இவர் ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்கப் பட்டார். மூட்டு வலி நோயாளியான அவரால் அந்த இல்லத்தில் வேலைகளை செய்ய முடியவில்லை. இதனால் அந்த இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். பின்னர் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எம் கருப்பையா சேவை மையத்தின் உதவியை நாடினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் மாண்புமிகு கருப்பையா வின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது என்று அவரின் சேவை மையத்தின் அதிகாரி இரா அற்புதவல்லி தெரிவித்தார். மாண்புமிகு கருப்பையாவின் உதவியதால் இப்போது அந்த மாது தங்குவதற்கு இடமும் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக இரா அற்புதவல்லி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles