
துணை அமைச்சருக்கு சொந்தமான கார் சாலை விதிமுறைகளை மீதி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகி உள்ளது. கறுப்பு நிற டோயோட்டா அல்பார்ட் கார் மற்ற கார்களை முந்திக்கொண்டு வெள்ளைநிற இரட்டைக் கோட்டில் சென்ற சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்று கிளாந்தான் மாநில சாலைப்போக்குவரத்து தலைவர் ஜோசோ தெரிவித்தார். சம்பந்தப்பட்ட காரை ஓட்டிச் சென்ற டிரைவர் தற்போது கோலாலம்பூரில் இருக்கிறார். மேலும் இது தொடர்பில் விசாரணை தொடர்கிறது என்றார் அவர். துணை அமைச்சர் விமான நிலையத்துக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டதால் மற்ற கார்களை முந்திக்கொண்டு இரட்டை கோட்டில் செல்ல நேர்ந்தது என்று டிரைவர் குறிப்பிட்டுள்ளார்..
