
12ஆவது மலேசிய திட்டத்தை நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசாங்கத் தரப்பில் 5 அமைச்சர்கள் மற்றும் 5 துணை அமைச்சர்கள் மட்டுமே அவையில் இருந்தனர் என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் குறிப்பிட்டார். உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவை மலேசிய கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் அரசாங்க தரப்பை சேர்ந்த பிரதிநிதிகள் எங்கே என்று அவர் கேள்வி எழுப்பினார்.
