
கோலாலம்பூரில் உள்ள சுங்கை பீசியில் சீனர் ஆலயத்தை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலை உடைக்க மண்வாரி இயந்திரம் அங்கு வந்தது. காவலுக்கு போலீஸ்காரர்களும் இருந்தனர். ஆனால் ஆலயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சீனர் ஆலயத்தை உடைக்க விடாமல் தடுத்து நிறுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
