
நாட்டின் முக்கியக் கழகமாக இருக்கும் அரசின் மீதான நம்பிக்கைச் சீர்குலையும் அளவிற்குக் கடந்த முறை செய்த தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நாம் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நம்பகமானக் கழகங்கள் ஏதும் இல்லா விட்டால் இந்த நாடு பாதுகாப்பானது என்ற உத்தரவாதத்தை நாம் எவ்வாறு வழங்குவது? என்னைப் பொறுத்தவரை நான் எளிமையான் முறையில் மன்னித்து விட்டேன். ஆனால் இதுபோன்ற தவறை மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.



