
சுங்கைவே டேசா மெந்தாரி குடியிருப்பில் வசிக்கும் 50 பேருக்கு ஸ்ரீசெத்தியா கிராமத் தலைவர் முத்துசாமி ஏற்பாட்டில் சுவையான உணவுகள் வழங்கப்பட்டன. கடந்த பல மாதங்களாக இங்குள்ள மக்களுக்கு பல வகைகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சத்திய சாய் பாபா சென்டர் மற்றும் டாக்டர் அஸ்வின் தலைமையிலான குழுவினர் தமக்கு பெரும் உதவி புரிந்து வருவதாக முத்துசாமி தெரிவித்தார்.
