
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜொகூர் மாநில ஜசெக மற்றும் அமானா கட்சிகள் பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் கெஅடிலான் மாநில தலைவர்கள் மற்றும் இளைஞர் பிரிவு கெஅடிலான் சின்னம் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
