
மீரா கட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பியவர்கள் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீரா கட்சியின் தலைமை செயலாளர் கண்ணன் ராமசாமி தெரிவித்தார். MIRA கட்சிக்கு எதிராக சைபர் குழுவால் மிக மோசமாக மற்றும் குறுந்தகவல் பரப்பப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக போலீஸ் மற்றும் எம்சிஎம்சிக்கு இலாகாவில் புகார் செய்யப்பட்டு இப்போது விசாரணை கோப்பு திறக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
