
மலாக்கா மாநில அரசாங்கம் கவிழும் வகையில் மாநில முதல்வருக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்ட சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் மற்றும் பந்தாய் குண்டோர் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஜ்மான் ஆகியோர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் அறிவித்தார். ஆனால் இதுவரை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று டதங இட்ரிஸ் ஹருண் தெரிவித்தார். அந்த வகையில் நான் இன்னமும் அம்னோ உறுப்பினர் என்று அவர் தெரிவித்தார்.
