
வெளிநாடுகளில் கருப்பு பணம் மூலம் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உட்பட பிரபலங்கள் பட்டியலை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த panama papers குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காரசாரமாக விவாதித்தபோது பெரும் அமளி ஏற்பட்டது. கடந்த 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டில் இது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். இந்த கேள்வியை எழுப்பி பிரபலமடைய விரும்பவில்லை. முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினை தொடர்பில் எனக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் என்பது தெரியும். Panama Papers தொடர்பாக பல நாடுகள் விசாரணையை தொடங்கிவிட்டன. இது நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியபோது அதற்கு அனுமதி தர சபாநாயகர் டத்தோ அஸாஹர் மறுத்து விட்டார். இதை அரச விசாரணை ஆணையம் அல்லது நாடாளுமன்ற சிறப்பு தேர்வு குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
