
நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் இயல்பாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவர். இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்டவுடன் இந்த நடைமுறை நடப்புக்கு வரும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாத்தி தெரிவித்தார். இயல்பாக வாக்காளராக பதிவு செய்யும் நடைமுறையை அமல் செய்வதில் தேர்தல் ஆணையம் கடப்பாடு கொண்டுள்ளது. இதிலிருந்து யாரும் விடுபடமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
