
மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற்றால், அதனால் ஏற்படும் மோசமான சூழ்நிலை எதிர் கொள்ள சுகாதார அமைச்சு தயாராகி வருகிறது. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். சபாவில் நடந்ததைப் போல, அதிலிருந்து நாம் இன்னும் மீளாததால், இப்போதைக்குத் தேர்தல்கள் வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று அவர் சொன்னார்
