
தோட்டத் தொழில்துறைக்கு 32,000 அந்நியத் தொழிலாளர்கள் இம்மாத மத்தியிலிருந்து கட்டம் கட்டமாக மலேசியாவுக்கு வருவர் என்று தொழில்துறை, தோட்டம் மற்றும் மூலத்தொழில் அமைச்சர்ஸ ஸுராய்டா கமாருடின் தெரிவித்தார். இந்தோனேசியா, வங்காளதேசம் நாடுகளை சேர்ந்த இந்த தொழிலாளர்கள் கோவிட் தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தியவர்களாவர். தோட்டத் தொழில்துறையில் அறுவடை சார்ந்த வேலைகளைச் செய்ய மலேசியர்கள் இன்னும் தயாராகவில்லை என்பதால் இவர்கள் இறக்குமதிச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்
