
மலாக்கா மாநில முதல்வர் சுலைமானுக்கு வழங்கிய ஆதரவை இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட தெலுக் மாஸ் பெர்சத்து கட்டசியின் சட்டமன்ற உறுப்பினர் நூர் எப்பெண்டி மீட்டுக்கொண்டார். நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்ததால் மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. இந்நிலையில் பெர்சத்து கட்சியுடன் சட்டமன்ற உறுப்பினர் நூர் எப்பெண்டி உறுப்பினர் அந்தஸ்து உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹைம்சா சைனுடின் தெரிவித்தார்.
