
பினாங்கு மாநிலத்தின் தென் செபெராங் பிறை மாவட்டத்திலுள்ள பைராமில் புதிய மின்சுடலை நிர்மாணிக்கப்படவுள்ளது.தனியாரிடமிருந்து நிலத்தை வாங்கி அங்கு நவீன முறையிலான மின்சுடலையை நிர்மாணிப்பதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டு வருவதாக செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷெல் தெரிவித்தார். செபெராங் பிறை மாநகர் மன்றத்தின் கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்திற்கு சுமார் 3 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ள வேளையில்,மேலும் 5 முதல் 6 மில்லியன் வரையில் மாநில அரசிடம் நிதி கோரப்படும் என்றார். இந்த இடத்தில ஒரு மண்டபம்,வழிபாட்டு அறை ஆகிய வசதிகள் உள்ளடக்கியிருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த மின்சுடலையை அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்
