
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்துள்ளது. மலாக்கா மாநில சட்டமன்றமும் கலைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலாக்கா மாநில தேர்தலை நடத்துவதா அல்லது அவசர நிலையை பிரகடனம் செய்வதா என்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். சட்டத்துறை தலைவர், சுகாதார அமைச்சர் மற்றும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து துணை பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு விளக்கம் அளிக்கும் என்றார் அவர். அதன் பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
